பாவனை
காத்திருந்து காத்திருந்து
தூங்கிக் கிடக்கிறதென்
புலன்கள்..
தாமதித்து
வீடு திரும்பி
தூங்கட்டுமென
எழுப்பாமல் விடுகிறாய்..
உன் வாசனையுணர்ந்து
விழித்துக் கொண்டயென் உறக்கம்
நீ எழுப்ப வேண்டுமென
பாவனை செய்து புரள
சற்று நேரம் கடந்து
உன்னிலிருந்து வெளியேறியது
என் உணர்வுகளை மிதித்தபடி
உன் குறட்டையொலி..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக