நடுநிசி அழைப்பு
நள்ளிரவில்
யாரிடமிருந்தோ
அழைப்பு வர
நெடுநேரம் பேசிக்
கொண்டிருந்தாய்..
என்ன ஏதென்று
கேட்ட போதும்
நெடுநாளாக பேசாத
ஒரு நட்பிடம்
பேசுவதாக சொல்லிவிட்டு
தொடர்ந்து பேசினாய்..
எனக்கான நேரத்தை
விழுங்கியபடியிருக்கும்
அந்த அழைப்பின் மீது
வெறுப்பு பரவுகிறது..
‘என்னதான் தலைபோகிற
அவசரம்
அதுவும் நள்ளிரவில்..’
மனதுக்குள் மருகியபடி
நள்ளிரவில்
தொலைபேசுபவர்களை
மன்னிக்க முடியாமல்
தத்தளிக்கிறதென் நேசம்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக