காயம்
அப்பா வீட்டிற்குச் சென்ற போது
வீடு ஒழுங்கு செய்கையில்
மேஜை மீது இடித்து
முழங்காலிலேற்பட்ட
காயத்திற்கு
வீட்டிலிருந்தவர்கள்
ஆளுக்கொரு மருந்தைத் தருகிறார்கள்..
அவற்றைப்
பெற்றுக் கொண்டு
எனது அறைக்குள் சென்று
தாளிட்ட பின்
மருந்துகளைப் புறக்கணிக்கிறேன்..
ஊருக்குத் திரும்பி
வருவதற்குள்
காயமாறிவிட்டால்
என்ன செய்வதென?
மருந்திடாமல் தவிர்க்கிறேன்..
என் காயம் கண்டு
உனக்கேற்படும்
சிறு கோபத்தினையும்
அதனூடான அக்கறையையும்
பெறுவதற்கு..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக