இந்த காதல் சின்ன சின்ன மாற்றங்களை சத்தமின்றி நிகழ்த்தும்..ஒரு யுத்த களமாக மனதை ஆக்கிவிடும். அதிலும் இருவரில் ஒருவர் அதை நட்பென்றும் மற்றொருவர் அதை காதலென்றும் வாதிட்டு சண்டையிட்டுக் கொள்வது பிறந்த குழந்தைக்கு என் பெற்றோரின் பெயர்தான் வைக்க வேண்டுமென தம்பதிகள் சண்டையிட்டுக் கொள்வது போல இருக்கிறது. இது எதுவும் அறியாத அந்த குழந்தையைப் போலவே இருவருக்கான நேசமும் என்ன் ஏதென்று தெரியாமல் குழப்பத்திலே நின்றிருக்கும். எல்லாம் சில நாட்கள் தான்.. பேசிப் பேசி இந்த பிரச்சினையை சரி செய்து கொண்டு விடலாம் என் நம்பிக்கையோடு ஒருவர் முன்னேறுகையில் மீண்டும் அந்த பிரச்சினையை இது நட்பு தான் என்று இன்னொருவர் கிளப்பி விடுவர்.. இந்த நபுக்கும் காதலுக்கும் என்ன வேறுபாடு? ஏன் இந்த மனம் நட்பை ஏற்றுக் கொள்கையில் காதலை ஏற்றுக் கொள்வதில்லை.. அல்லது காதல் வரை சென்ற மனம் நட்பில் லயிக்க முடிவதில்லை.. இது பேசப் பட வேண்டிய விஷயம்..
"நீயாய் சூட்டிக் கொள்கிறாய்..
நட்பென்றும் காதலென்றும்..
இரண்டுமில்லை..
இது இருவருக்கான அன்பு..
இருவருக்கானது மட்டுமே..
பிரிந்திருக்க ஒப்பாத பிரியம்
அவ்வளவே"
ஸ்டாலினாவின் காதல் வெளி குறித்த பார்வை இன்னும் தொடரும்..
ஞாயிறு, 6 ஜூன், 2010
காதல் எதுவும் செய்யும்
இந்த காதல் செய்யும் பொல்லா தனங்கள் இருக்கிறதே.. அப்பப்பா இதை எல்லோரும் வாழ்வில் ஒருமுறையாவது அனுபவித்து இருப்பார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.. நேசம் கொண்ட இருவருக்கிடையே ஏதேனும் பிரச்சினை என்றால் உடனே மனம் படும் பாடு இருக்கிறதே..அதை சொல்லில் அடக்க முடியாது.. அவ்வளவு வலியானது.. யாரவது அப்போது நல்லவிதமாக நாலு வார்த்தைகள் சொல்ல மாட்டார்களா? என ஏங்கிக் கிடக்கும் அந்த சிறு மனம்.. பேரறிஞர்கள் சொன்ன பொன்மொழியிலும், உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகளிலும் தமக்கு தேவையான இடங்களையும், மேற்கோள்களையும் எடுத்துக் காட்டி யாரேனும் பேச ஆரம்பித்தால் என்ன வேலை எப்படிக் கிடந்தாலும் அதில் போய் ஒட்டிக் கொள்ளும்.. அந்த இடத்திலிருந்து கரை கடக்க தானே அந்த மனம் முயன்றாலொழிய அது அவ்விடத்தை விட்டு நகராது.. இந்த காதல் என்ன செய்யும்? என்ற கேள்விக்கு ஒரே பதில் தான் உண்டு.. இந்த காதல் எதுவும் செய்யும்.. அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் உலகையே புரட்டியும் போடும்..
''காதல் தன்னை காத்துக் கொள்ளும்
காதலுக்கு தடைகள் ஆயிரம் வந்த போதும்..
காதல் தன்னை மாய்த்துக் கொள்ளும்
காதலித்தவரே காயப் படுத்தும் போது''...
''புரிதலில் விதைக்கப்படும் காதல்
அறுவடையாகிறது
புறத்தோற்றத்தில் தூவப்படும் காதல்
பலியாகிறது ''
ஸ்டாலினாவின் காதல் குறித்த பார்வை இன்னும் தொடரும்..
''காதல் தன்னை காத்துக் கொள்ளும்
காதலுக்கு தடைகள் ஆயிரம் வந்த போதும்..
காதல் தன்னை மாய்த்துக் கொள்ளும்
காதலித்தவரே காயப் படுத்தும் போது''...
''புரிதலில் விதைக்கப்படும் காதல்
அறுவடையாகிறது
புறத்தோற்றத்தில் தூவப்படும் காதல்
பலியாகிறது ''
ஸ்டாலினாவின் காதல் குறித்த பார்வை இன்னும் தொடரும்..
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)