குறுந்தாடி குத்துகிறதென
முத்தமிட தடுக்க
முகச்சவரம் செய்து வந்தாய்..
ஆங்காங்கே ஆறேழு
இடங்களில் ரத்தம் கசிய
முத்தமிட்டேன்
கண்ணீருடன்
உன் காயங்களில் ...
பின்னும்
அழுது கொண்டே இருந்தேன்
சிறுகத்தியிலேற்பட்ட
காயத்திற்கு
முத்தத்தாலான
காயமே மேலென...
-------------------------
இரவுகளில்
வரும் சிறு மரணத்தின் போது
என் குணமறிந்து
நடக்கத் தவறுமுன் நேசம்
வித்திடுகிறது
மீளா பெருந்துயருக்கான
பாதையொன்றை..
--------------------
உன்னை
வெறுப்பதாக
சொல்லுமென்
சொற்களில் நிழலாய்
நகர்வது
உன் மீதான அதீத விருப்பமே..
----------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக