புதன், 21 ஜூலை, 2010

இவனும் இவளும் - 5

குறுந்தாடி குத்துகிறதென 
முத்தமிட தடுக்க 
முகச்சவரம் செய்து வந்தாய்.. 
ஆங்காங்கே ஆறேழு 
இடங்களில் ரத்தம் கசிய 
முத்தமிட்டேன் 
கண்ணீருடன் 
உன் காயங்களில் ... 
பின்னும் 
அழுது கொண்டே இருந்தேன் 
சிறுகத்தியிலேற்பட்ட 
காயத்திற்கு 
முத்தத்தாலான 
காயமே மேலென...
-------------------------
இரவுகளில் 
வரும் சிறு மரணத்தின் போது 
என் குணமறிந்து
நடக்கத் தவறுமுன் நேசம்
வித்திடுகிறது
மீளா பெருந்துயருக்கான 
பாதையொன்றை.. 
--------------------
உன்னை
வெறுப்பதாக 
சொல்லுமென்
சொற்களில் நிழலாய்
நகர்வது
உன் மீதான அதீத விருப்பமே..
----------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக