புதன், 21 ஜூலை, 2010

இவனும் இவளும் - 2


ஒவ்வொருமுறையும் 
நீ என்னை நேசிக்கிறாயாவென
சந்தேகத்துடன் 
கேட்பதில்லை.. 
சந்தோஷத்துடன் தான் 
கேட்கிறேன்..
நீ சொல்லும் 
இப்போதைய ஆமோதிப்புகளையும் 
மறுதலிப்புகளையும் 
மட்டுமல்ல..
முன்னால் 
உன்னால் 
ஒப்புக்கொள்ளப்பட்ட 
எல்லா வார்த்தைகளையும்   
சேர்த்தே கணக்கில் 
எடுத்துக் கொள்கிறேன்.. 
ஆயினும் அவ்வப்போது 
எனை உயிர்ப்பிப்பது 
நீ முன்னர் தூவிய 
அந்த ஒற்றை வார்த்தையே 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக