இப்படி நடுவீதியில் நின்று
யாரைப் பற்றியும் கவலைப்படாமல்
கண்ணீரை பொலபொலவென சிந்தி
பிறருக்கு உற்று கவனித்தாலொழிய
புரியாத வார்த்தைகளை
உதிர்த்து கொண்டிருக்கிறாய்
அந்த தொப்பைவயிறு படைத்தவனிடம்..
உன் கண்ணீருக்கு தேற்றும் விதமாய்
தன் தும்பிக்கையையேனும்
அசைத்ததா அந்த கடவுள்?
உன் வார்த்தைகளை செவிமடுத்ததாய்
தன் முறம் போன்ற காதுகளையேனும்
விசிறியதா?
எந்த நம்பிக்கை உன்னை
அந்த கடவுளிடம் அழைத்து செல்கிறது?
அதில் சிறு அளவையேனும்
உன்னிடத்தில் வை..
கடவுள் ஒரு யாசகன்
யாசகன் ஒரு மனிதன்
மனிதன் ஒரு கடவுள்
அருமையான பதிவு.
பதிலளிநீக்குமிகவும் நன்று ...
Tamil News | Latest Tamil News | Tamil Newspaper | Kollywood News