வெள்ளி, 10 டிசம்பர், 2010

முரண்கள்



உன்னிடம் 
சண்டை போடும் போது
சமாதானத்திற்கு 
வெள்ளைச் சிரிப்பை
ஏந்தி வருகிறாய்

கோபப்படும் போது
சமரச வார்த்தைகள்
பேச துணிகிறாய்

சமாதானமும்
சமரசமும் உனக்கானவை
கோபமும்
சண்டையும் எனக்கானவை
நம்மை 
இணைப்பது 
இந்த முரண்கள்தான்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக